Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இரு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காலை 5.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Kidhours – Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.