Thirukkural 459 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / சிற்றினம் சேராமை
”மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.”
மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
—மு. வரதராசன்
ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
—சாலமன் பாப்பையா
![''மனநலத்தின் ஆகும் மறுமைமற்.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 459 1 Thirukkural 459 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/12/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1.jpg)
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 459
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.