Tamil Kids News World Tigers Day பொது அறிவு – உளச்சார்பு
2030 இல் உலகத்தில் மொத்தமே 3900 மனிதர்கள்தான் இருப்பார்கள் என்று யாராவது உங்களிடம் வந்து சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நிச்சயமாக சொல்பவரை முட்டாள் என்று கூறிவிட்டு கடந்து விடுவீர்கள்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு புலிகளிடம் சென்று யாராவது இதை சொல்லியிருந்தால் அவையும் இதை நம்பியிருக்காது. துரதிர்ஷ்டவசமாக உலகமெங்கிலும் தற்போது 3900 புலிகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

காடுகளின் பாதுகாவலன் புலி என்று அழைக்கப்படுவதுண்டு. காட்டில் இருக்கும் அந்த உயிர்சுழற்சியின் சமநிலைக்கு புலிகள் மிக அவசியம். ஆனால் பல ஆண்டுகளாகவே புலிகள் அழிவின் விளிம்பில் இருந்து வருகின்றன.
வேட்டைக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் புலிகள் கொல்லப்பட்டதன் விளைவு தற்போது உலகம் முழுவதுமே 3900 புலிகள்தான் வாழ்ந்து வருகின்றன. இதில் வெள்ளை புலி, கறுப்பு நிற கோடுகள் கொண்ட வெள்ளை புலி, கோல்டன் நிற புலி, பாலி டைகர், காஸ்பியன் டைகர், பழுப்பு நிற புலிகள், ஜாவான் புலிகள் என நிறைய வகைகள் உள்ளன.
இவற்றை பாதுகாப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் அனுஷ்டிக்க படுகிறது. 2010இல் ரஷ்யாவில் நடந்த புலிகள் பாதுகாப்பு மாநாட்டில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2022க்குள் புலிகள் உள்ள நாடுகள் அதன் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. 1973 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் புலிகளை பாதுகாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வேட்டையாடுதல், காடுகள் அழிப்பு ஆகிய காரணங்களால் தொடர்ந்து புலிகளின் அழிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான முரண்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில சமயங்களில் அது உயிர் பலிக்கும் காரணமாகிறது.
பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
உலக புலிகள் எண்ணிக்கையில் 70% இந்தியாவில் தான் உள்ளன. நம் நாட்டில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு கணக்கின்படி மத்தியப் பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகத்தில் 524 புலிகளும் தமிழகத்தில் 229 புலிகளும் வசிக்கின்றன. மீதமுள்ளவை மற்ற புலிகள் பாதுகாப்பகங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன.
இருப்பினும் அவை அழிவின் விளிம்பிலிருந்து இன்னும் தப்பிக்கவில்லை என்பதையும் மறக்க கூடாது. காடுகள் மட்டுமின்றி உலக உயிர்கள் ஒவ்வொன்றும் சுழற்சி அடிப்படையில் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழ்ந்து வருகிறோம். இந்த சுழற்சி நீடித்து சமநிலையில் பயணிக்க ஒவ்வொரு உயிரியின் ஒத்துழைப்பும் பங்கும் அவசியம். அதில் புலிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
புலிகளுக்காக, நமக்காக என இவ்வுலகிற்காக நாம் புலிகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதுவே பல்லுயிர் பெருக்கத்துக்கு வழிவகுக்கும்.
kidhours – Tamil Kids News World Tigers Day , Tamil Kids News World Tigers Day in Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.