Thirukkural 433 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / குற்றங்கூறாமை
”தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். ”
பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
—மு. வரதராசன்
![''தினைத்துணையாங் குற்றம் வரினும்.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 433 1 Thirukkural 433 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/11/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1.jpg)
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
—சாலமன் பாப்பையா
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 433
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.