Musical Programme Attack சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தலைநகர் மாஸ்கோவில் க்ரோகஸ் சிட்டி ஹாலில் வெள்ளிக்கிழமை பிக்னிக் என்ற இசை குழுவினரின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அதில், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது ராணுவ உடையுடன் திடீரென துப்பாக்கியுடன் 4 பேர் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினர். இதில் அரங்கின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மாஸ்கோவில் நடந்த மிக மோசமான பயங்கர தாக்குதல் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனிடையே, நேரடி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் உள்பட 11 பேரை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Kidhours – Musical Programme Attack
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.