Sunday, July 7, 2024
Homeசிறுவர் செய்திகள்கொரோனா தடுப்பூசிகளை அதிகம் பெற்ற நாடுகள் World Tamil kids news

கொரோனா தடுப்பூசிகளை அதிகம் பெற்ற நாடுகள் World Tamil kids news

- Advertisement -

Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகளவில் 200 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி மருந்தில் பெரும் பங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பெற்றுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார நிறுவனம், ‘கோவாக்ஸ்’  (covid19 vaccine)திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்தை பாரபட்சமின்றி அனைத்து நாடுகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவன பொதுச் செயலரின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வர்டு கூறியதாவது: இந்த வாரம் உலகளவில் தடுப்பூசி சப்ளை, 200 கோடி, ‘டோஸ்’ என்ற அளவை தாண்டியுள்ளது.

- Advertisement -
free covid19 vaccine
tamil news kidhours

இதில், 10 நாடுகளுக்கு மட்டும், 75 சதவீத தடுப்பூசி கிடைத்துள்ளது. அதில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் பங்கு, 60 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில், 10 சதவீதம் உள்ள, குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு, 0.5 சதவீத அளவிற்கே தடுப்பூசி கிடைத்து உள்ளது. நடுத்தர வருவாய் உள்ள நாடுகளும், சராசரியை விட சிறிதளவே கூடுதலாக தடுப்பூசியை பெற்றுள்ளன.

- Advertisement -

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், அவற்றின் உள்நாட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு வாயிலாக கொரோனா சவாலை சமாளித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.