Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
21ஆம் நூற்றாண்டில் பல விஷயங்கள் மாறினாலும், நவீனமானாலும், உணவு என்பது எந்த காலத்திலும் மாறாத அடிப்படைத் தேவை. உணவை வீட்டில் சமைக்காவிட்டாலும், உணவகங்களில் இருந்து வரவழைத்துக் கொள்ளும் போக்கு உலக அளவில் பரவலாக உள்ளது. இது இப்போது மிகவும் சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் உணவு விநியோகத்திற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது என்பது தான்… இது எங்கே, எந்த நாட்டின் என்று தெரியுமா? தென் கொரியாவில் தான்…

தென் கொரியாவின், பீட்சாக்களை ட்ரோன்கள் மூலம் விநியோகிக்கப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.தென் கொரியாவின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “செஜோங் நகரத்தில் ட்ரோனின் பீட்ஸா விநியோகத்தை கொரிய ட்ரோன் நிறுவனம் `பி-ஸ்கொயர் ‘மற்றும் உலகளாவிய பீஸ்ஸா சங்கிலித்தொடர் நிறுவனம்` டோமினோ பிஸ்ஸாவுடன் இணைந்து வணிகமயமாக்குவதாக அறிவித்துள்ளது.
ட்ரோன் விநியோகத்தின் வணிகமயமாக்கல் பகுதி டொமினோ பீட்சா செஜோங் போரம் கிளையிலிருந்து செஜோங் லேக் பார்க் வரை உள்ளது. மேலும் இது இந்த ஆண்டு ட்ரோன் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் சிறப்பு தாராளமயமாக்கல் மண்டலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, செஜோங் நகரத்திலிருந்து இயக்கப்படுகிறது.
ட்ரோன் டெலிவரி பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை ட்ரோன்கள் பீட்சா டெலிவரி சேவையை செய்யும். ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 31 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில். செஜோங் ஏரி பூங்காவிற்கு வரும் மக்களுக்கு மொபைல் ஆப் மூலம் ட்ரோன் டெலிவரி சேவை கிடைக்கும் என தென் கொரியாவின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் டெலிவரி மூலம் பீட்சா பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் செஜோங் லேக் பார்க் அருகே உள்ள டொமினோ பிஸ்ஸாவின் அதிகாரப்பூர்வ டெலிவரி செயலியில் ஆர்டர் செய்தால், பீட்சாவை எடுத்து வரும் ட்ரோன் எங்கு இருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.
கோவிட் -19 க்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மிகவும் பொருத்தமான நேரடி சேவைகளை வழங்குவதற்காகவும், நகர்ப்புறங்களில் ட்ரோன் விநியோகத்தை விரிவுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
kidhours – Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.