121 People Died in the Crowd சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென்னாசிய நாடான இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் பெரும்பாலான பெண்கள் குழந்தைகள் சிக்கி இதுவரை மொத்தமாக 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் திரும்பிச் செல்லும்போது சரியான வெளிச்செல்லும் பாதை இல்லாமல் அல்லது தெரியாமல் நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதிகமானோர் மயங்கி விழுந்துள்ளனர்.
![கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 121 பேர் பலி 121 People Died in the Crowd 1 121 People Died in the Crowd சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/07/Untitled-design-8.jpg)
உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,ரஷிய அதிபர் புதின் ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Kidhours – 121 People Died
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.