Thirukkural 92 தினம் ஒரு திருக்குறள் கற்போம்…
அறத்துப்பால் / இல்லறவியல் / இனியவை கூறல்
”அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.”
![''அகன்அமர்ந்து ஈதலின் நன்றே..................'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 92 1 Thirukkural 92 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/11/thinam-oru-kural-kidhours-4-1.jpg)
முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
—மு. வரதராசன்
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
—சாலமன் பாப்பையா
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 92
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.