Tuesday, October 29, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் அதிக வயதான பெண் மரணம் World Aged Women

உலகின் அதிக வயதான பெண் மரணம் World Aged Women

- Advertisement -

World Aged Women  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் மிகவும் வயதான பெண் ஒருவர் தனது 128வது வயதில் மரணமடைந்துள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜோஹன்னா மசிபுகோ. 1894ஆம் ஆண்டு பிறந்த இவர் தான் உலகின் மிகவும் வயதான ஆவார்.
128 வயதான மசிபுகோ தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

பக்கவாதத்தினால் மசிபுகோ உயிரிழந்திருக்கலாம் என அவரது பராமரிப்பாளரும், மருமகளுமான தந்தீவி வெசின்யானா தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது 128வது பிறந்தநாளில் மசிபுகோ பேசியபோது, ‘இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

- Advertisement -

நான் ஏன் இன்னும் இங்கே இருக்கிறேன்? என்னைச் சுற்றியிருந்தவர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

நான் எப்போது இறப்பேன்? உயிரோடு இருந்து என்ன பயன்? நான் ஒன்றும் செய்யாமல் இங்கு அமர்ந்திருப்பதால் உலகம் என்னை சோர்வடையச் செய்தது’ என கூறினார்.

மசிபுகோவுக்கு பிறந்த பிள்ளைகள் ஏழு பேர் ஆவர். அவர்களில் இருவர் தான் உயிருடன் உள்ளனர்.

மேலும் 50 பேரப் பிள்ளைகள் மற்றும் சில கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் உள்ளனர். ஜோஹன்னா மசிபுகோ வரும் சனிக்கிழமை அன்று ஜோபர்டனில் அடக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – World Aged Women

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.