Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்மூளையை தாக்கும் அமீபா Amoeba Affects

மூளையை தாக்கும் அமீபா Amoeba Affects

- Advertisement -

Amoeba Affects

- Advertisement -

தென் கொரியாவில் மனித மூளையைத் தாக்கி விரைவாகக் கொல்லும் நாக்லேரியா பவ்லேரி(naegleria fowleri) அமீபாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்குள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும் நாக்லேரியா பவ்லேரி அமீபாவால் ஒருவர் உயிரழந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த 50வயது மதிக்கத்தக்க அந்த நபர் கடந்த 4 மாதங்களாக தாய்லாந்தில் வசித்து வந்தார்.

- Advertisement -
Amoeba Affects  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Amoeba Affects  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இவர் கடந்த 10ம் திகதி தாய்லாந்தில்இருந்து தென் கொரியாவுக்கு வந்த நிலையில் அடுத்தநாளே அந்த நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

அங்கு அவரின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு ரத்தமாதிரிகள் எடுத்து அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டன. அதில் அந்த நபருக்கு மூளைத் தாக்கும், பிரையன் ஈட்டிங் அமீபா தாக்கியுள்ளமை தெரியவந்தது.

அதேவேளை தென் கொரிய வரலாற்றிலேயே பிரையன் ஈட்டிங் அமீப எனப்படும் நாக்லேரியா பவ்லேரி அமீபா தாக்கியுள்ளது இதுதான் முதல் முறையாகும். இந்த அமீபாவால் இந்த நபர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்ட சில நாட்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தநபர் உயிரிழந்தார்.

அதேவேளை கடந்த 1937ம் ஆண்டு அமெரிக்காவில் இந்த நாக்லேரியா பவ்லேரி அமீபா கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாக்லேரியா பவ்லேரி அமீபா என்பது பொதுவாக மருத்துவ உலகில் பிரையன் ஈட்டிங் அமீபா என்று சொல்லப்படும்.

அதாவது இந்த அமீபா மூளையைக் தாக்கி மனிதர்களை கொல்லும். இந்த அமீபாக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், நன்னீர்ஏரிகள் ஆகியவற்றில் வாழும் தன்மை கொண்டது.

இந்த அமீபா இருக்கும் தண்ணீரை மனிதர் மூக்கின் வழியாக உரிந்தாலோ அல்லது, மனிதர்களின் மூக்கின் வழியாக இந்த அமீபா சென்று மனிதர்களின் மூளை திசுக்களை பாதித்து கொல்லக்கூடியது என கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தென் கொரியா சுகாதாரத்துறை கூற்றுப்படி, “ நாக்லேரியா பவ்லேரி அமீபா மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகக்குறைவு,ஆனால், நீர் நிலைகளில் குளிக்கும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நாக்லேரியா பவ்லேரி அமீபாவால் கடந்த 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்தில் 381 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Kidhours – Amoeba Affects

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.