Tasmania Researchers சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அவுஸ்திரேலியா கண்டத்தின் தாஸ்மானியாவின் ஆராய்ச்சியாளர்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்டு கடலுக்குள் மீன் கூடுகள் இடப்பட்டமையினால் மீன் எண்ணிக்கைகளில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிய முயன்றுள்ளனர்.
. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், தாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் IMAS குழு, மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் இரண்டு செயற்கை கூடுகளை அமைத்தது. இயற்கையான மீன் இனப்பெருக்கம் செய்வதற்கு பொருத்தமான பிரதேசங்கள் குறைவான இடங்களில், பெரிய மீன்களை ஈர்த்து மக்களுக்கான மீன்பிடியை மேம்படுத்தும் நோக்கில் இவை அமைக்கப்பட்டன. இந்த கூடுகளை உருவாக்க, குழுவினர் 10 முதல் 15 மீட்டர் ஆழத்தில் சுமார் 150 கான்கிரீட் வடிவங்களை பயன்படுத்தினர்.
ஆராய்ச்சியாளர்கள் வீடியோ மற்றும் ரிமோட்-ஓப்பரேட்டட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றின் வளர்ச்சியை கண்காணிக்கவும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது .

அத்துடன் IMAS ஆராய்ச்சியாளர் டாக்டர் சாரா உகால்டே, இந்த திட்டம் மீன் இனங்களுக்கான இனப்பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் என்றும், தாஸ்மானியாவில் மீன்பிடியை மேம்படுத்தும் எனக் கூறினார் அத்துடன் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க உதவும் எனவும் நம்பப்படுகின்றது.
Kidhours – Tasmania Researchers
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.