Friday, October 18, 2024
Homeகல்விசிறுவர் நீதி கதைகள்

சிறுவர் நீதி கதைகள்

- Advertisement -

சிறுவர் நீதி கதைகள்

- Advertisement -

1.வஞ்சகம் வெல்லாது
ஒரு குளக்கரையில் கொக்கொன்று வஞ்சகத்துடன் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டிருந்தது. துள்ளிக்கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மை சும்மாவிடாதே ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்?”என்று யோசித்துக் கொண்டே அதன் முன் வந்தது. என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மாநிற்கிறீர்?”என்றது. கொக்கு சொன்னது“நான் மீனை கொத்திதின்பவன் தான் ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை”என்றது கொக்கு.
மனசு சரி இல்லையா ஏன்? என்றது மீன். “அதை ஏன் கேட்கிறாய்” என்றுப்அலட்டிக்கொண்டதுப்கொக்கு. “பரவாயில்லைப்ப்சொல்லுங்களேன்““என்றதுப்மீன். கொக்கு“சொன்னால் நீ அதிர்ந்துப்போவாய்”மீன் பயந்தது. சொன்னால் தானே தெரியும் என்றது. “வற்புறுத்திக் கேட்டதாலே சொல்கின்றேன் இப்போது ஒரு மீனவன் வரப்போகிறான்…”என்று இழுத்தது கொக்கு. “வரட்டுமே”“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகப் பிடித்துச் சென்று விடப்போகிறான்.”
“அய்யய்யோ!”உடனே அம்மீன் உள்ளே சென்று விட்டது. சில நிமிடங்கள் கடந்திருக்கும் பலமீன்கள் கொக்கின் முன் துள்ளின. அது மட்டுமா..! ஒட்டு மெத்தமாக“நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்தில் இருந்து காப்பாறவேண்டும்”என்று கெஞ்சின ஆபாயம் சொன்னவனே உபானமும் சொல்வான் என்று அவைகள் யோசித்துகொக்கிடம் உதவிக்கேட்டன. நான் என்ன செய்வேன்? ஏன்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான் வேண்டுமென்றால் உங்களை இக்குளத்தில் இருந்துவேறொரு குளத்துக்கு கொண்டு போகலாம். ஆதனால் எனக்கு இந்ததல்லாத வயதில் பரோபகாரி என்றபெயரும் வரும். நீங்களும் பிளைத்திருப்பீர்கள் என்று கொக்கு மிகவும் இரக்கம் கசிய கூரியது. மீன்கள் எல்லாம் தன் உயிரைகாப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிரீர்கள்: அப்படியே செய்யுங்கள்”என்றன ஒரு மித்த குரலில்.
கொக்குக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி தாளவில்லை. நடைக்கு ஒவ்வொன்றாக் குளத்தில் இருந்து மீன்களை கௌவ்விக் கொண்டு சென்றது. இதை ஒரு நண்டு பார்த்துக்கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்கு போக ஆசை வந்தது. கொக்காரிடம் சென்று என்னையும் வேறு குளத்திற்கு கொண்டுப் போகச் சொல்லி கெஞ்சியது உன்னை நான் எவ்வாறு கௌவ்விக் கொண்டு போவது என்று வருத்தத்துடன் கூறிமறுத்தது. இப்போது நண்டு நான் முதுகில் ஏறிஉன்னை இருக்கபித்துக்கொள்கின்றேன். நீ அக்குளத்திற்கு கொண்டு சென்று விடு என்றுது. உள்ளுக்குள் மகிழ்ந்துக்கொண்டே சம்மதித்தது கொக்கு.
கொக்கின் முதுகில் ஏறிக்கொண்டது நண்டு கொக்கு பறக்க ஆரம்பித்தது. கீழே பார்த்துக் கொண்டே நண்டு சொன்றது வழியில் பாறைகளில் மீன் முல்லுகளும் மீன்களும் சிதறிக்கிடப்பதைக் கண்டது நண்டு. அப்போதுதான் நண்டுக்கு விஷயம் புரிந்தது. “கொக்கார் மீன்களை கொண்டு வந்து திண்றுக் கொண்டிருக்கின்றுது. இப்படியானால் இப்போது என்னையும் தின்றுவிடுமோ இதனிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று யோசித்தது. இதனை சும்மா விடக்கூடாது என்று நினைத்தது. கொஞ்கம் கொஞ்கமாக அதன் கழுத்தின் அருகே சென்றது. நண்டுதன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை கொஞ்ம் கொஞ்சமாக நெரித்து இரண்டுத் துண்டாக்கியது. நண்டு ஒரு குளத்திற்குள் விழுந்துக்கொண்டதால் உயிர்ப்பிழைத்தது.
நீதி:-மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து வாழ்பவர்களுக்கு அழிவு நிச்சயம்.

neethikkathaikal_kids stories

- Advertisement -

2.எலியின் பேராசை
ஒரு விட்டில் ஒரு சுண்டெலி இருந்தது. ஆதற்கு உணவு போதுமானதாக கிடைப்பதில்லை. அதனால் ரொம்ப வருத்ததுடன் இருந்தது அப்படி இருக்கும் போது அந்தவீட்டில் இருந்த அம்மா ஒரு பணையில் நெல்லைபோட்டு வைப்பதை பார்த்தது. அந்த பானையை சுற்றி வலம் வந்துக்கொண்டிருந்தது அதில் சிறிய ஓட்டை இருப்பதை கண்டது. அதன் வழியாக பானைக்குள் புகுந்து அந்த நெல்லை வயிறு நிறம்பதின்றது போதும் என்று மனம் செல்லியும் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தின் பிறகு உண்ண முடியாமல் போகவே அப்பானையில் இருந்து வெளி வர நினைத்தது. ஆனதல் அதனால் முடியவில்லை. அளவுக்கு மீறி உண்டதால் உடல் பருத்துக்கொண்டது. வெளியில் வருவதற்கு பெரிதும் முயற்சித்தது தலை மட்டும் வெளியே வந்தது. ஊடல் உள்ளேயே மாட்டிக்கொண்டது பாவம் அது…
நீதி:-பேராசை இருத்தால் கூடாது.

- Advertisement -

3.நரியும் அதன் நிழலும்.
ஒரு நரி அதிகாலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே இருந்து வந்த சூரிய ஒளிலில் அதன் நிழல் வெகு நீழமாய் தெரிந்தது. நரிக்கே குதுகலமாலிற்று. “நான் ஆள் போல.அதுவும் இந்தக் காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்தை விடவும் பெரியவனாக இருக்கிறேன் போல”. என நினைத்துக் கொண்டே வேட்டைக்குச் சென்றது.
செல்லும் வழிலில் நரி ஒரு சிங்கத்தை கண்டது சிங்கமோ அது சற்று முன்னர்தான் ஒரு மானை வேட்டையாடி அதை உணடக்களைப்பில் மெதுவாக நடந்து வந்துக் கொண்டிருந்தது. நரியும் தான் மிக பெரியவன் எனநினைத்துக் கொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்துசென்றது. சிங்கமும் நரிரை ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. நரிக்கோ மிகவும் சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் தன்னைக்கண்டு பயந்து சென்றது. என நினைத்துக் கொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சென்றது.
மாலைதன் குகைக்கு சென்றதும் நரிகாட்டில் உள்ள மிருகங்களை அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் அழைப்பிற்கு வருகை தந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும் “இனிமேல் நான் தான் இந்தகாட்டிற்கு ராஜா”என்று கூறியது. யானையோஇ” இதை நாங்கள் ஏற்க முடியது என்றது. உடனே நரி காலையில் நடந்ததை கூறி சிங்கமே என்னைப் பார்த்து பயந்தது.”என்றது கூட்டத்தில் இருந்தமானோ சிங்கத்தை உன் முன் மண்டியிடச்சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக்குவோம்.”என்றது.
அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதைக் கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்ம் வந்தவுடன் சிங்கத்தைப் பார்த்து “என் முன்னால் மண்டியிட்டு” என்று நரி கூரியது. சிங்கமோ மிகவும் கோவம் கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்தது உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல் என்றது. நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து“முடியாது”என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது.
அது மதியநேரம் அல்லவா?நிழல் உண்மையான அளவில் இருந்தது. இப்போதுதான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில்தான் தன்னனுடைய நிழல் பெரிதாக இருந்தது என்று.இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கம் ஒரே அடியினால் நரியைக் கொன்றது. பாவம் அந்த முட்டாள் நரி.
நீதி:- முட்டாலள் தனமாக இருந்தால் உணிரை கூட இழக்கநேரிடும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.