Sunday, September 15, 2024
Homeசிந்தனைகள்ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய காகித அலங்கார பொருட்கள்

ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய காகித அலங்கார பொருட்கள்

- Advertisement -

தேவையானபொருட்கள்
1.நிற காகிதம் – தேவையான அளவு
2.கத்தரிக்கோல் – 01
3.பசை – தேவையான அளவு
4.கடினமான மட்டை – 01

- Advertisement -

உரு.1.

முதலில் ஓர் நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 29 சென்ரி மீற்றர் நீளமும் 3 சென்ரி மீற்றர் அகலமுடைய காகிதத்தை வெட்டி எடுக்கவும். ஓர் நிற காகிதத்தை  எடுக்கவும். வெட்டிய நீளத்தில் 1சென்ரி மீற்றர் அகலமுடையதான கோடுகளை அடி மட்டம் கொண்டு அளந்து அடுத்தடுத்து வரைந்து கொள்ளவும்.

- Advertisement -
ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய காகித அலங்கார பொருட்கள் 1 சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

வரைந்து கொண்ட கோடுகளை முன்னும் பின்னுமாக படத்தில் காட்டியவாறு விசிறி போன்று மடித்துக் கொள்ளவும். மடித்த காகிதத்தின் ஓர் முனையில் சரிவாக முக்கோணமான துண்டை வெட்டி அகற்றவும்.அகற்றிய பின்னர் மீண்டும் மேல் கூறப்பட்டவாறே மற்றைய காகிதத்தையும் மடித்து அதன் முனையையும் வெட்டவும். பின்னர் ஆரம்பத்தில் செய்ததன் ஒரு பக்கத்தையும் இரண்டாவதாக செய்ததன் ஒரு பக்கத்தையும் ஒன்ரொடு ஒன்று பசை பூசி ஒட்டவும்.பின்னர் அவற்றின் மற்றைய பக்கங்களையும் ஒன்ரொடு ஒன்றை பசை பூசி படத்தில் உள்ளவாறு ஒட்டிக் கொள்ளவும். பின்னர் படத்தில் உள்ளவாறே அதனை விரித்துக் கொள்ளவும். நடுவில் ஓர் கடினமான அட்டையில் வெட்டிய வட்டத் துண்டை ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது அழகிய பூ உருவம் தயாராகி விட்டது.

- Advertisement -

உரு.2.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

அடுத்து முதலில் ஓர் நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 12 சென்ரி மீற்றர் நீளமும் 12 சென்ரிமீற்றர் அகலமுடைய காகிதத்தை வெட்டி எடுக்கவும்..அதை முக்கோணமாக மடித்து விடவும். மீண்டும் மீண்டும் அவ்வாறே இரு முறை அதனை மடித்துக் கொள்ளவும். பின்னர் ஓர் அடி மட்டத்தின் உதவியுடன் அதன் முனையிலிருந்து ஓர் கோடு வரையவும். பின்னர் படத்தில் காட்டியவாறு கோடுகளை வரைந்து அதன் வரை கோட்டின் ஊடாக இதய வடிவில் வெட்டிக் கொள்ளவும். வெட்டி எடுத்த துண்டின் முனையை குறிப்பிட்ட அளவு வெட்டி அகற்றவும். பின்னர் மற்றைய துண்டுகளையும் ஆரம்ப துண்டின் அளவில் அளந்து ஒட்டிக் கொள்ளவும். இவ்வாறாக மொத்தம் 5 துண்டுகளை வெட்டவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

வெட்டிய துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து விரியுங்கள். முதலாவதாக விரித்த துண்டில் ஓர் இதலின் பாதி துண்டை வெட்டிக் கொள்ளவும். இரண்டாவதாக விரித்த துண்டில் ஓர் இதல் துண்டை வெட்டிக் கொள்ளவும். மூன்றாவதாக விரித்த துண்டில் இரு இதல் துண்டை வெட்டிக் கொள்ளவும். நான்காவதாக விரித்த துண்டில் மூன்று இதல் துண்டை வெட்டிக் கொள்ளவும். ஜந்தாவதாக விரித்த துண்டில் நான்கு இதல் துண்டை வெட்டிக் கொள்ளவும். வெட்டி எடுத்த துண்டுகளில் முதல் பாதியினை சுருட்டிக் கொள்ளவும். இவ்வாறாக மற்றைய துண்டுகளையும் சுருட்டி பசை பூசி ஒட்டிக் கொள்ளவும். பின் ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டி பூவினை உருவாக்கி கொள்ளவும். பின்னர் காகிதத்தில் 12 சென்ரி மீற்றர் நீளமும் 2.5 சென்ரி மீற்றர் அகலமுடைய காகிதத்தை வெட்டி எடுக்கவும்..அதனை சுருட்டிக் கொள்ளவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

மொத்தமாக 22 சுருள் காம்புகளை சுருட்டவும். மேலும் ஓர் தடிப்பான மட்டை ஒன்றில் ஓர் வட்டம் வரைந்து வெட்டி கொள்ளவும். வெட்டிய வட்டத்தில் சுருட்டி வைத்த காம்புகளை வட்டமாகவே படத்தில் காட்டியவாறு ஒட்டவும். பின்னர் வட்டத்தின் நடுவிலே பசை பூசி செய்து வைத்த பூவினை ஒட்டவும். பூவினை ஒட்டிய பின் ஓர் காகிதத்தில் 6 சென்ரி மீற்றர் நீளமும் 6சென்ரி மீற்றர் அகலமுடைய காகிதத்தை வெட்டி எடுக்கவும்..அதில் வண்ணத்து பூச்சி போன்ற உருவினை வரைந்து அதனை

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

வெட்டி எடுக்கவும். இவ்வாறாக மொத்தம் 22 வண்ணத்து பூச்சிகளை வெட்டவும். வெட்டியவண்ணத்து பூச்சிகளை ஒவ்வொரு காம்பிலும் ஒவ்வொன்றாக ஒட்டிவிடவும். பின்னர் 8 சென்ரி மீற்றர் நீளமும் 8 சென்ரி மீற்றர் அகலமுடைய காகிதத்தை எடுத்து இரண்டாக மடித்து அதில் இலை போன்ற உருவத்தை வெட்டிக் கொள்ளவும்.வெட்டிய இலை வடிவத்தை படத்திலுள்ளவாறு ஒட்டவும். இப்பொழுது சுவரில் ஒட்டிவிட கூடிய அலங்காரகாட்சி பொருள் தயாராகிவிட்டது.

உரு.3.

முதலில் ஓர் நிறகாகிதத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 5 சென்ரி மீற்றர் நீளமும் 5 சென்ரி மீற்றர் அகலமுடைய காகிதத்தை வெட்டி எடுக்கவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

அதை நான்காக மடித்து பின் அதனை முக்கோணமாக மடித்து அதில் மடி கோடுகளை ஏற்படுத்தி விடவும். அவ் மடி கோடு வழியே படத்தில் உள்ளவாறு முக்கோணமாக மடியுங்கள். ஆனால் அவை ஒன்ரொடு ஒன்று இணையாதவையாக இருக்கவேண்டும். பின்னர் சிறியகுச்சி உதவியுடன் ஒவ்வொன்றாக முதலில் வளைத்துவிடவும் பின்னர் சுருட்டி படத்தில் உள்ளவாறு எடுத்து கொள்ளவும். இவ்வாறாக ஓர் நிற காகிதத்தில் (நெம்மஞ்சள்) 6 ம் மற்றைய நிற காகிதத்தில் (நீலம்) 12 மாக செய்து கொள்ளவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

பின்னர் செம்மஞ்சளில் செய்த ஓர் உருவத்தை எடுத்து சிறியகுச்சியின் உதவியுடன் ஒன்றௌடு ஒன்றை இணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக முதலில் செம்மஞ்சள் உருவங்களையும் பின்னர் நீல உருவங்களையும் இணையுங்கள். இப்பொழுது அழகான பூ தயாராகி விட்டது.

உரு.5.

அடுத்ததாக முதலில் ஓர் நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 10 சென்ரி மீற்றர் விட்டம் உடைய 2 வட்டங்களை அக்காகிதத்தில் வெட்டி எடுக்கவும்

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

வெட்டிய வட்டத்தை முதலில் பாதியாக மடித்து பின்னர் மேலும் முக்கோணமாக மடிக்கவும். முக்கோணமாக மடித்த துண்டில் படத்தில் காட்டியுள்ளவாறு அதன் ஒரு முனையிலிருந்து மற்றைய முனை வரை முதலில் வரைந்து கொள்ளுங்கள். பின்னர் வரை கோட்டின் வழி வெட்டவும். வெட்டிய பின் அதன் இடை வெளியில் மீண்டும் கத்தரிக்கோலால் பெரிதாக வெட்டவும். வெட்டியதை விரித்து விடுபட்டிருந்த சில இதல்களையும் வெட்டவும். பின்னர் அதேபோல் மற்றைய வட்டத்தையும் பாதியாக மடித்து முக்கோணமாக மடித்து படத்தில் உள்ளவாறு வெட்டவும். வெட்டிய முதல் வட்டத்தில் ஓர் மடி கோட்டை வெட்டி பசை பூசி ஒட்டவும். மற்றைய வட்டத்தில் ஓர் சிறு துண்டை வெட்டி எடுத்து அதன் இரு முனைகளையும் பசை பூசி ஒட்டியும் இவ்வாறாக 3 பூக்களும் தயாரானவுடன் ஓர் 15 சென்ரி மீற்றர் நீளமும் 7 சென்ரி மீற்றர் அகலமுடைய காகிதத்தில் காம்பு ஒன்றினை சுருட்டி கொள்ளவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

பின்னர் 6 சென்ரி மீற்றர் நீளமும் 6 சென்ரி மீற்றர் அகலமுடைய காகிதத்தை எடுத்து இரண்டாக மடித்துஅதில் இலை போன்ற உருவத்தை வெட்டிக் கொள்ளவும்.நீல நிறமொன்றினை எடுத்து அதனையும் காம்புபோல சுருட்டவும். ஆரம்பத்தில் சுருட்டி கொண்ட காம்பில் ஒவ்வொன்றாக பூக்களின் முனைகளை வெட்டி காம்புடன் ஒட்டவும். ஒட்டிய பின் இரண்டாவதாக செய்த காம்பினை இலையுடன் ஒட்டி பூக்கள் ஒட்டிய காம்புடன் ஒட்டிவிடவும். இப்பொழுது அழகான பூ ஒன்று உங்கள் கைகளிலிருக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.