Latest World Tamil Kids News
பிரான்சில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வரலாற்றில் இல்லாத அளவில் 16 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே, பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், வாத்துக்கள் அதிகம் வளர்க்கப்படும் நாட்டின் தென்மேற்கு பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும் , இந்த ஆண்டு முதன்முறையாக பாதிக்கப்பட்ட பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பறவைக்காய்ச்சல் அலை உருவாகி, இப்போதுதான் அது முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் பிரான்சில், சுமார் 1,400 இடங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை , மார்ச் இறுதி வாக்கில் பறவைக்காய்ச்சல் உச்சம் தொட்ட நிலையில், இப்போது தொற்று பரவும் வேகம் குறைந்து வருவதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
kidhours – Latest World Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.