Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்திவால் நிலையை அறிவித்துள்ள இலங்கை அரசு Latest Tamil Kids News # World Best...

திவால் நிலையை அறிவித்துள்ள இலங்கை அரசு Latest Tamil Kids News # World Best Tamil Children News

- Advertisement -

Latest Tamil Kids News

- Advertisement -

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு மீண்டும் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவெடுத்துள்ளது. இதனிடையே, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள இலங்கையில், உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். மேலும், பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தான் முக்கிய காரணம் என்றும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

கொழும்பு, காலி முகத் திடலில் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்காக உணவு மற்றும் குடிநீர் வசதிகள் மட்டுமின்றி நடமாடும் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
Latest Tamil Kids News
Latest Tamil Kids News

இந்நிலையில் கோத்தபய பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மகிந்த ராஜபக்சே, போராட்டங்கள் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு சரிந்து வருவதாக, மக்கள் மீது பழி போட்டுள்ளார். மேலும், இலங்கையின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு பாடுபட்டு கொண்டிருப்பதாகவும், மக்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை அரசு, பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திரும்பி தர இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கோத்தபய அரசுக்கு மீண்டும் ஆதரவளித்துள்ள எம்.பி., சாந்த பண்டார மீண்டும் அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளதோடு, பிரியங்கர ஜெயரத்னவின் ராஜினாமா கடிதத்தை அதிபர் நிராகரித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான பணிகளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தொடங்கியுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் 20 எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலையில், எம்.பி.க்களின் கையொப்பங்களை பெறும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொழும்பு சென்றடைந்தது. தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு வருவதை ஒட்டி சென் குளோரி கப்பல் மூலம் இந்த அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 16 ஆயிரம் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Latest Tamil Kids News , Latest Tamil Kids News update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.