Robot suicide சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கிழக்காசிய நாடான தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில், ரொபோவை கட்டுப்பாட்டு பணியாளர்களினால் மீட்டுள்ளது . படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ ஒரு இடத்தில் சுழன்று, பின்னர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததாக குமி நகர அதிகாரிகள் மாற்று கண்காணிப்பு பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
![அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரோபோ தற்கொலை Robot Suicide 1 Robot suicide சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/07/Untitled-design-2024-07-04T002559.895.jpg)
இருப்பினும் குறித்த சம்பவத்திற்கான தொழில்நுட்பக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ரோபோவின் தற்கொலைக்கு குமி நகர மக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தென் கொரிய ஊடகங்கள் இந்த சம்பவத்தை நாட்டின் முதல் ரோபோ தற்கொலை என்று தெரிவித்துள்ளன.
Kidhours – Robot suicide
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.