Hospital Fire Incident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தலைநகர் பெய்ஜிங் நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சாங்பெங் வைத்தியசாலையில் தீ பரவியதாக பிற்பகல் 1.00 மணியளவில் தகவல் கிடைத்தது என அசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அரை மணித்தியாலத்தில் தீ அணைக்கப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கைகள் 2 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தீ பரவியதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து 71 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இன்று புதன்கிழமை காலை வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சைனா டெய்லி பத்திரிகை தெரிவித்துள்ளது.
Kidhours- Hospital Fire Incident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.