Friday, October 18, 2024
Homeகல்விகட்டுரைஎறும்புகள் பற்றிய கட்டுரை Tamil Essay about Ants

எறும்புகள் பற்றிய கட்டுரை Tamil Essay about Ants

- Advertisement -

Tamil Essay about Ants  சிறுவர் கட்டுரை

- Advertisement -

எறும்பு சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றது. சிறுக சிறுக சேமித்து வைக்கும் பழக்கத்தை எறும்பிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்பர். மேலும் அணிவகுப்பிற்கும் உதாரணமாக எறும்பை சொல்வர். இப்படி எறும்புகள் தொடர்ந்து செல்வதற்கு காரணம் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்! பலர் எறும்புக்கு கண் தெரியாது என்பர். இதில் ஓரளவு உண்மை இருக் கிறது. எப்படியென்றால், “ஓம்மடீரியா’ என்ற சிறு கண் போன்ற கூட்டுறுப்புகள் பல கொண்டுள்ள எறும்புக்கு கண்ணின் பார்வை மிக மங்கல்தான்.

பின், இவை எப்படி ஒன்றன்பின் ஒன்றாக செல்கிறது. “ப்யூரமோன்’ என்றும் “ப்யூமரிக் அமிலம்’ என்றும் சில ரசாயனப் பொருட்கள் எறும்பின் உடலிலிருந்து வெளிப்படும். எனவே, ஒரு எறும்பு செல்லும் போது அவற்றில் இருந்து வெளிவரும் இந்த ரசாயனத்தின் மணத்தை வைத்து மற்றொரு எறும்பு பின் செல்கிறது. இது அறிவியல் கூறும் உண்ம

- Advertisement -

நம்மைவிட அளவில் மிகச்சிறியவை (கிட்டதட்ட 10000 மடங்கு சிறியவை). பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன.
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார் 130மி 10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் பூராவும் வாழ்கின்றன.

- Advertisement -

எறும்புகள் தனது எடையை விட 20-50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன. எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம். அவை; egg, larva, pupa, aduit.
சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர் வாழும். பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது. எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. நடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.

எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும். எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்பு ராணி எறும்பாகும். எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அதுக்காகவும், மற்றது ஏனைய எறும்புகளுக்காகவும். எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன.

சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன. எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது. கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை காலனி என்பார்கள்.
2002ம் ஆண்டில் பில்லியன் கணக்கான எறும்புகளைக் கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள் நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது. இது இத்தாலி, ஸ்பெயின் எல்லையில் அறியப்பட்டது.

Tamil Essay about Ants  சிறுவர் கட்டுரை
Tamil Essay about Ants  சிறுவர் கட்டுரை

சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியன. அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை. சில எறும்புகள் நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நேரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் தகுதி உடையவை.

வட அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார் 5 பில்லியன் பெறுமதியான உடைமைகள் சேதமாகின்றன. எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியன.

மனிதர்களும், எறும்புகளும் மட்டும் தான் விவசாயம் செய்கின்றோம். ஆனால் மனிதன் விவசாயம் செய்வதற்கு முதலிலிருந்தே எறும்புகள் விவசாயம் செய்துள்ளன.

எறும்புகள் மனிதனை விட பல மடங்கு பலம் கொண்டவை. எறும்புகள் தன்னுடைய எடையை விட 20 லிருந்து 50 மடங்கு அதிகளவு எடையை தூக்கக்கூடியது. எறும்புகள் சண்டையிடும் போது அவைகள் இறக்கும் வரை சண்டைகளை  நிறுத்துவதில்லை. எறும்புகளுக்கு 2 வயிறுகள் இருக்கும். ஓன்று அது சாப்பிடும் உணவு. மற்றொன்று மற்ற எறும்புகளுக்காக சேமித்த உணவு. எறும்புகள் பல்வேறு அளவுகளில் உள்ளது. சில எறும்புகளை பூதக் கண்ணாடியில் தான் பார்க்க முடியும்.

எறும்புகள் எப்பொழுதும் தனித்து வாழாது. கூட்டம் கூட்டமாக தான் வாழும். சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. சில எறும்புகள் நீரில் வாழும் தன்மை கொண்டுள்ளது. பொதுவாக நீருக்கு அடியில் 4 மணிநேரம் உயிர்வாழும் தன்மையை கொண்டுள்ளது. ஒரு சில எறும்புகள் தண்ணீருக்கு மேல் மிதக்கும் தன்மையை கொண்டுள்ளது. எறும்புகள் தனக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியது.

ஓன்று சேர்ந்து வாழும் தன்மையை கொண்டது. எறும்புகளிடம் நுகரும் திறன் மனிதர்களை விட அதிகம் உள்ளது. எறும்புகளின் சிறிய உடல் அமைப்பே அதன் வலிமைக்கு காரணமாகிறது. எறும்புகளின் உடல் பெரிய குறுக்குவெட்டு பகுதிகளை கொண்டுள்ளது. எனவே அவை வலுவானதாக உள்ளது. எறும்புகள் ஒற்றுமையாக வாழும் திறனை கொண்டு பல வேலைகளை செய்து முடிகின்றன. எறும்புகளின் ஒற்றுமையே அதன் பலமாக உள்ளது.

எறும்புகளின் உடலில் சுவாச அமைப்புகள் கிடையாது. இதற்கு பதிலாக எறும்புகளின் உடலை சுற்றி ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவும் சுவாச வழிகள் உள்ளன. மேலும் அதன் உடலில் அமைந்துள்ள துளைகளான சுழல்களின் மூலம் சுவாசிக்கிறது. இந்த சுழல்களின் மூலம் ஒவ்வொரு காலத்திற்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. எறும்புகளுக்கு கேட்கும் திறன் உண்டா? எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. எறும்புகளால் கேட்க முடியாது என்று அர்த்தம் இல்லை.

நடக்கும் போது ஏற்படக்கூடிய அதிர்வுகள் அல்லது நிலத்தின் அதிர்வை கொண்டு பொருட்களை அறிந்துகொள்கின்றன. எறும்புகளின் முழங்காலுக்கு கீழ் அமைந்துள்ள துணை உறுப்புகள் காரணமாக இவை அதிர்வை உணர செய்கின்றன. குறிப்பு: மேலே படித்ததை போல நாமும் சுறுசுறுப்பாகவும் நமக்குள் ஒற்றுமையாகவும் இருப்பது எப்படி என்று எறும்புகள் மூலம் தெரிந்துகொண்டோம்.

 

Kidhours – Tamil Essay about Ants, Tamil Essay about Ants – history

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.