Taste of Honey in Tamil தேடல்
வேலைக்காரத் தேனீக்கள் நீண்ட தொலை தூரம் பயணம் செய்து, பூக்களில் உள்ள பூந்தேனை உறிஞ்சுகின்றன. இந்தப் பூந்தேனில் பெரும்பாலும் நீரும் குளுக்கோஸ், சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் ஆகிய சர்க்கரைகள்தான் இருக் கின்றன. உறிஞ்சிய பூந்தேன், தேனீக்களின் வயிற் றில் உள்ள ஓர் அறையில் சேகரிக்கப்பட்டு, கூட் டுக்கு எடுத்து வரப்படுகிறது.
அப்படி வருவதற்குள் பூந்தேன் சில வேதிவினைக்கு உள்படுகிறது.கூட்டில் இருக்கும் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்களிடமிருந்து பூந்தேனைப் பெற்று, தங்கள் வாய்களால் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன. அப்போது உருவாகும். நொதிகள் சர்க்கரைகளையும் புரதங்களையும் உடைத்து, அமிலக் கரைசலாக மாற்றுகின்றன.
இதன் மூலம் பக்டீரியா, பூஞ்சைகளால் தேன் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப் படுகிறது. 70 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக நீர்ச்சத்து குறைந்த இந்தத் தேன் அறுகோண வடிவில் இருக்கும் தேன் கூட்டின் அறைகளில் வைக்கப்படுகிறது.

மேலும், நீர்ச்சத்தைக் குறைக்கும் விதத்தில், தேனீக்கள் தங்கள் இறக்கைகளால் சூடான காற்றைச் செலுத்துகின்றன. இப்போது எளிதில் கெட்டுப்போகாத, இனிப் பான தேன் உருவாகிவிடுகிறது.
Kidhours – Taste of Honey in Tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.