South China Ocean Conference பொது அறிவு செய்திகள்
தென் சீனக்கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடானது ஒக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையினால் நடத்தப்பட இருப்பதோடு, அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வட்டமேசை மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.கலந்துரையாடலானது பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த கலந்துரையாடலில், சீனாவின் ஷென்ஸன் வட்டமேசை மாநாடு வருடாந்தம் நடைபெற்று வருவதோடு ஒற்றுமையுடன் பயணித்து, பட்டுப்பாதையின் ஞானத்தை பெறுவோம் (Walk Together in Harmony and Gather the Wisdom of the Silk Road) என்ற தொனிப்பொருளின் கீழ் 22 நாடுகளின் பங்கேற்புடன் இம்முறை மாநாடு இலங்கையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
![இலங்கையில் தென் சீனக்கடல் வலய வட்டமேசை மாநாடு South China Ocean Conference 1 South China Ocean Conference பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/09/Untitled-design-2023-09-17T203309.057.jpg)
மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தொடர்புள்ள அரச நிறுவன அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – South China Ocean Conference
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.