Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது.இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1-ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர், அதன் மையம் இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Earthquake, tamil geography
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.